Posts

Showing posts from 2018

நிலாக்கால நினைவுகள் - 15

Image
"காற்று வெளியிடைக் கண்ணம்மா, - நின்றன் காதலை யெண்ணிக் களிக்கின்றேன் -" எனது நேற்றைய இரவுப்பாடல்களில் ஒன்று இதுவாக இருந்தது. மனம் மகிழ்ந்தது. வழக்கம் போல் மனம் ஐம்பது வருடங்களுக்கு முந்தைய காலகட்டத்திற்குப் பறந்து சென்றது. இதுவும் அம்பத்தூர் கிருஷ்ணா டென்ட் தான்! பள்ளிப்பாடங்களில் வருகின்ற சுதந்திர போராட்ட வீரர்கள் குறித்த படம் என்பதால் பள்ளியில் சிறப்புச் சலுகை கொடுத்து இந்தப் படத்திற்குக் கூட்டிச் சென்றார்கள். ஆனால் என் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் நான் செல்ல இயலவில்லை. நான்கு நாட்கள் கழித்து மாமா குழந்தைப் பட்டாளங்களைக் கூட்டிச்சென்று காண்பித்த படம் ! விஷயத்துக்கு வருவோம்! 'கப்பலோட்டிய தமிழன்' திரைப்படத்தில் மகாகவி பாரதியார் எழுதிய வரிகள் இந்த மகத்தான காதல் கவிதை, சிந்தை மயக்கும் விந்தை புரிந்தது திரு.ஜி.ராமநாதன் அவர்களின் இசையிலும், பி.பி ஸ்ரீநிவாஸ் மற்றும் பி.சுசீலா அவர்களின் தேனையொத்த தீங்குரலிலும் ! இதற்குப்பிறகு, இசையறிந்த ஒவ்வொருவரின் உதடுகளிலும், இந்தப்பாடல் புகுந்து புறப்படாமல் இருந்ததே இல்லை எனலாம் ! இந்த இசை மேலாகப் பார்ப்பதற்கு எளிதாகத் தோன்...

நிலாக்கால நினைவுகள் - 14

Image
"என்னுயிர்த் தோழி கேளொரு சேதி" https://www.youtube.com/watch?v=xjSMyoMJi40 'அமீர் கல்யாணி' ராகம் என்றதும் முதலில் என் நினைவுக்கு வருவது 'கர்ணன்' திரைப் படத்தில் வரும் இந்தப் பாடல்தான் ! எத்தனை முறை கேட்டாலும் அலுக்காது! கர்ணன் படத்தில் அத்தனை பாடல்களுமே அற்புதம். இசை : விஸ்வநாதன்-ராமமூர்த்தி; பாடல்கள்: கவியரசர் கண்ணதாசன்; இந்தப்பாடலைத் தன் தேனினும் இனிய தீங்குரலில் வழங்கியிருப்பவர் திருமதி பி.சுசீலா அவர்கள். பாடலின் இடையில் ஒரு நீண்ட 'ஹம்மிங்' , நம்மை அப்படியே பிரமிக்க வ ைக்கும், எப்படி இத்தனை நேரம் 'ஹம்மிங்' கொடுக்கிறார் என்று ! என்ன ஒரு திறமை ! மெல்லிசை மன்னர்களின் இசைக்கு எத்தனை அள்ளிக் கொடுத்தாலும் போதாது ! இவர்களின் இசைக்கு அந்தக் கர்ணன் கொடுக்கும் கொடையையே துலாபாரம் நிறுத்தினால் கூட, இசையின் தட்டு தாழ்ந்தே இருக்கும் ! அப்படி ஒரு தரம் ! ஒவ்வொரு பாடலும் கர்நாடக இசைப் பின்னணியில் மனதை மயக்குகின்றன. கவியரசரின் பாடல்கள் தனிநிறம் காட்டும் ! சொல்லவே தேவையில்லை ! "வருகின்ற வழக்கை தீர்த்து முடிப்பான் மனைவியின் வழக்...

நிலாக் கால நினைவுகள் - 13

Image
'மாலையும்  இரவும்  சந்திக்கும்  இடத்தில்'  சகோதரி லதா இன்று என் நினைவுகளை மலர்விக்க நினைந்து அனுப்பிய ஒரு அற்புதமான பாடல் !  1961  இல் வெளிவந்த 'பாசம்' திரைப்படத்தின் பல இனிமையான பாடல்களில் இது என் மனம் கவர்ந்த ஒன்று. இந்தப் படத்தை நாங்கள் பார்த்தது 1961  இல் தான் ! மறக்கமுடியுமா அந்த இனிமையான நாளை ! எம்.ஜி.ஆர் படங்களின் பாடல்கள் என்றால் அவை அமுத கானமாகத்தான் இருக்கும். பாடல்களுக்காகவே படத்தைப் பார்க்க விரும்புவேன் ! 1964 க்கு மேல் பல படங்களை  மாமாவின் அலுவலகத்தில் தொழிலாளர் சங்க வளாகத்தில் பார்த்ததுண்டு. அப்படி, மாமா கூட்டிச் சென்ற ஒரு படம்தான் 'பாசம்' ! இசை மெல்லிசை மன்னர்கள் விசுவநாதன் - ராமமூர்த்தி.  பாடல் கவியரசர் கண்ணதாசன்!  மேற்குறிப்பிட்ட இந்தப் பாடலைப் பாடியவர்கள் திரு.பி.பி.ஸ்ரீனிவாஸ் மற்றும் ஜானகியம்மா ! இனிமையான குரல்கள் ! நல்ல பொருத்தம் !  இந்தப் பாடலுக்கு நடித்திருப்பவர்கள் கல்யாண்குமார் மற்றும் ஷீலா ! பொருத்தமான நடிப்பு ! விரசமில்லாத காதலை மிக அழகாக வெளிப்படுத்தும் நடிப்பு.! இன்னும் என் நினைவில் உள்ளது , ...

நிலாக் கால நினைவுகள் - 12

"கண்ணும் கண்ணும் கலந்து சொந்தம் கொண்டாடுதே"  இந்த நாட்டியப் போட்டியை எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காது ! நீங்கள் பார்த்ததுண்டா ?  இசையும், முகபாவங்களும், பொலபொலவென மத்தாப்பூக் கதிர்களாய் உதிரும் நாட்டியத்தின் விரைவசைவுகளும் என்றும் மனதில் நிற்கும்.  போட்டிக்கேற்ற கேள்வி பதில்களாய் பாடல் வரிகள் ! எப்படித்தான் எழுத முடிந்ததோ என்று வியக்க வைக்கும் ! கொத்தமங்கலம் சுப்பு அவர்களின் எளிமையான அதே சமயம் அழுத்தமான வரிகள் ! பி.லீலா மற்றும் ஜிக்கி இருவரின் இனிமையான மற்றும் வளமான குரல்கள் ! மனதை மயக்கும் அற்புதமான இசையை நமக்கு அளித்திருப்பவர் சி. ராமச்சந்திரா.  பத்மினி  மற்றும் வைஜயந்திமாலா இருவரின் மனம் கவரும் நாட்டியம் !  படத்தின் பெயர் 'வஞ்சிக்கோட்டை வாலிபன்' .  குறைந்த வசதிகளே கொண்ட கீற்றுக் கொட்டகையில் படத்தைப் பார்த்த அந்தக் காலகட்டங்கள்தான் எத்தனை மகிழ்ச்சியானவை ! இன்று நினைத்தாலும் சுவை குன்றாத சுந்தர நினைவுகள் !  மனதைப் பந்தாட வைக்கும் அந்த இனிமையான இசையும் , துள்ளல் நாட்டியமும் இன்றைக்கு நினைத்தாலும் மனத்தைக் கொள்ளை கொள்கின்றன ! ...

நிலாக் கால நினைவுகள் - 11

Image
"தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே,   அமைதியுன் நெஞ்சில் நிலவட்டுமே" ---------------------------------------------------------------------------------------------------------- இன்று என் நினைவை அள்ளிக் கொண்டுபோன ஒரு பாடல் !  'ஆலயமணி' என்ற அற்புதமான படத்தில் வரும் ஒரு அழகான, அமைதியான பாடல். என்றும் என் மனத்துக்குகந்த பாடல் !  பட்டப்பா (என் மாமா) வேலை பார்த்து வந்த டி.ஐ.சைக்கிள் நிறுவனத்தார், மாதமொரு முறை அவர்களது தொழிலாளர் சங்கத்தின் சார்பாக, அவர்களது அலுவலக வளாகத்தில், ஒரு படம் திரையிடுவது வழக்கம். அது ஒரு சனிக்கிழமை. அன்று காலை ஆபிஸ் கிளம்பும்போதே மாமா என்னையும் தம்பியையும் , மாலை அலுவலகத்தினருகில் வரும்படி சொல்லிவிட்டார், படம் பார்ப்பதற்காக ! அப்படிப் பார்த்த பல படங்களில் ஒன்றுதான் 'ஆலயமணி ' !  இன்னும் நினைவிலிருந்து அகலாத ஒரு படம். சினிமாவைத் தவிர போனஸாக, எங்களுக்கு ஆபிஸ் கேண்டினிலிருந்து பஜ்ஜி, காபி வேறு கிடைக்கும் . அதனால் நாங்கள் இங்கு படம் பார்ப்பதை மிகவும் விரும்புவோம்! ஆகா ! அந்த நினைவுகள்தான் எத்தனை இனிப்பானவை ! நிற்க, இந்தப் பட...

நிலாக் கால நினைவுகள் - 10

Image
பாத்தா பசுமரம் படுத்துவிட்டா நெடுமரம் இன்று என் தம்பி பாபு அனுப்பியிருந்த இன்னொரு சிறந்த பாடல் , 'திருவிளையாடல்' படத்திலிருந்து  'பாத்தா பசுமரம் படுத்துவிட்டா நெடுமரம்' என்ற பாடல்.  மனம் பின்னோக்கிப் பறந்து பறந்து வட்டமடிக்கிறது , கேட்கும்போது ! பட்டப்பாவே இரண்டு முறை கூட்டிச் சென்றிருக்கிறார் இந்தப் படத்திற்கு எங்களை !  ஐம்பத்து மூன்று வருடங்கள் ஆனாலும் கூட , அந்த இனிய காலங்கள் இன்னும் மனதை நிறைக்கின்றன !  அற்புதமான படம், பாடல்கள் !  கவியரசர் கண்ணதாசன் அவர்களின் வரிகளுக்குத் தகுந்தாற்போல் சிவாஜி கணேசன் அவர்களின் நடிப்பு !  திரையிசைத் திலகம் கே.வி.மகாதேவன் அவர்களின் அற்புதமான இசை!  டி.எம்.எஸ். அவர்களின் வெண்கலக்குரல்! இந்தப் பாடலின் வரிகளுக்குத் தகுந்தாற்போல் வேடமிட்டு நிற்கவைத்த பாத்திரங்களின் வரிசை ! வண்ணப் படங்கள் அருகியிருந்த அந்தக் காலத்தில், ஈஸ்ட்மென் கலர் வண்ணப்படம் ! ஏ.பி.நாகராஜன் அவர்களின் இயக்கம், திரைக்கதை, வசனம், தயாரிப்பு ! பொருத்தமான நடிகர்கள் ! ஒவ்வொரு நடிகரின் சோடை போகாத நடிப்பு ! அற்புதமான புராணக் கதை மற்றும் கதைய...

நிலாக் கால நினைவுகள் - 9

Image
மலரும் வான் நிலவும் சிந்தும் ஒலியெல்லாம்.. ஆஹா ! நினைவுகளைக் கிளறிவிடும் அற்புதமான ஒரு பாடல் ! என் தம்பி பாபு இன்று அனுப்பியிருந்த 'மலரும் வான் நிலவும்' என்ற பாடல் ! அம்பத்தூர் டென்ட் கொட்டாயில் பார்த்த எண்ணற்ற படங்களில் ஒன்று 'மகாகவி காளிதாஸ்' ! அற்புதமான படம் . படங்களைத் தேர்ந்தெடுத்துதான் எங்களைக் கூட்டிச் செல்வார் பட்டப்பா! அந்தப் பன்னிரண்டு/பதின்மூன்று வயதில் பார்க்கும் அனைத்துமே ஆச்சர்யமாக இருக்கும் ! அதுவும் சினிமா என்பது எஙகளுக்கு அளவிடற்கரிய ஒரு வரம் ! பார்த்துக் கொண்டிருக்கும்போதே கதையில் வரும் நகைச்சுவை, நடிப்பு, பாடல் அனைத்தையும் பற்றி எடுத்துச் சொல்லிக் கொண்டே இருப்பார். இதனால் தேவையற்ற சில காட்சிகளை குழந்தைகள் பார்க்க நேரிடாது ! நல்ல உத்தி ! புராணப் படங்களை பற்றிய கதைகளை முன்கூட்டியே எங்களுக்கு சொல்லியும் இருப்பார். அதனால் படத்தைப் பார்க்கும்போது ஏற்படும் மகிழ்ச்சி அளவற்றது. பதினாறு வயது வரை குழந்தைத்தனம் மாறாமலேயே இருந்துவிட்ட அந்தக் காலகட்டங்கள் மறக்கவே முடியாது ! இன்றைய குழந்தைகளோடு ஒப்பிட்டுப் பார்த்தால் பல விஷயங்களும் ஆச்சர்யமாகவே   இர...

நிலாக் கால நினைவுகள் - 8

Image
' மலர்களைப்போல் தங்கை உறங்குகிறாள் ' சகோதரி லதாவின்  இன்றைய தேர்வு  மேற்கண்ட பாடல் !  கேட்கும்போதே மனம் பறக்கிறது பின்னோக்கி ! நான் ஏழாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்த காலம். அம்பத்தூர் 'கிருஷ்ணா' கீற்றுக் கொட்டகையில் பார்த்த படம்.  அந்த மைதானமும், நடுவில் கொட்டகையும், மாட்டு  வண்டியில் படத்தின் விளம்பர ஓசையும், காட்சிகளாகக் கண்முன்னே விரிகின்றன !  மறக்க முடியாத வெற்றிப் படமான பாசமலர் படத்தின் ஒரு அருமையான பாடல்  . அந்தக் காலத்தில் ஒரு வெற்றி பெற்ற படமானால் அத்தனை பாடல்களும்  நன்றாகவே  இருக்கும்.  நடிப்பைச் சொல்வதா, கதையைச் சொல்வதா, இசையைச் சொல்வதா ,  இன்முக நடிகர் தேர்வைச்சொல்வதா, வசனத்தைச் சொல்வதா ,  பாடல் வரிகளைச் சொல்வதா, இயக்கத்தைச் சொல்வதா, இன்னொளிப் பதிவின் தரத்தைச் சொல்வதா .......ஒன்றுக்கொன்று போட்டி போட்டுக்கொண்டு செயல்பட்ட அக்காலத்திய திரைப் படங்கள் மகத்தான திரைக் காவியங்கள் என்பதில் சற்றும் ஐயமில்லை ! மேற்கூறிய இத்தனை விஷயங்களும் இந்த ஒரு பாடலிலேயே அடங்கிவிடும் என்று சொன்னால் மிகையாகாது. இசையும் வ...

நிலாக்கால நினைவுகள் - 7

Image
பார்த்த ஞாபகம் இல்லையோ ! இன்று சகோதரி லதா  Latha Rajaraman  எனக்கு அனுப்பியிருந்த பாடல் புதிய பறவை படத்திலிருந்து 'பார்த்த ஞாபகம் இல்லையோ' !  அருமையான  ஒன்று ! சேலம் கல்பனா திரையரங்கில் 70 களில் பார்த்த படம் ! இளமைக்கால நினைவுகள் தரும் சுகமே தனி. (கல்பனா திரையரங்கு இன்று இல்லை ! எல்லா பழைய கட்டிடங்களையும் போல புதிய 'மால்'கள் உருவாக இடம் கொடுத்து விட்டு அழிந்து மறைந்து விட்டது, என் நினைவுகளின் புகலிடமாக இருந்த அந்த இடம்!) அத்தையிடம் எதோ ஒரு பொய்யைச் சொல்லிவிட்டு கிளம்பிப் போய் பார்த்த பல படங்களில் ஒன்று. அத்தைக்குப் புரியாதா என்ன !! நிற்க, பாடலுக்கு வருவோம் ! மெல்லிசை மன்னர்களின் அதியற்புதமான பாடல்களில் ஒன்று 'பார்த்த ஞாபகம் இல்லையோ' . இந்தப் படத்தில் உள்ள அனைத்துப் பாடல்களுமே முத்தான பாடல்கள்தான் ! எனினும் இது எனது மனம் கவர்ந்த பாடல்களில் ஒன்று. ஆங்கிலேயர்களின் பாப் இசையை அழகாகக் கலந்து கொடுத்திருப்பர் மன்னர்கள். இசையரசி சுசீலா அம்மா அற்புதமாகப் பாடியிருப்பார். பின்னணி இசை கேட்கவே வேண்டாம்.! கவியரசரின் அற்புத வரிகளையும், நடிகர் திலகம் மற்றும் சவுகார...

நிலாக்கால நினைவுகள் - 6

Image
'காவேரிக் கரையிருக்கு கரை மேலே பூவிருக்கு' 'காவேரிக் கரையிருக்கு கரை மேலே பூவிருக்கு' இன்று லதா என்ன ஒரு அருமையான பாடலை அனுப்பியிருந்தார் தெரியுமா  !  "காவேரிக் கரையிருக்கு, கரை மேலே பூவிருக்கு" என்ற பாடல்! நினைவுச்சக்கரம் மறுபடி பின்னோக்கிச் சுழல்கிறது.  This particular song takes me back to my school days. I was in my 8th std.  There used to be Sports Day every year , as everyone knows. Sports க்கும் எனக்கும் ஏணி வச்சாக்குட எட்பாது.  ஆனா நான் ஒரு ஸ்போர்ட்ஸ் டே கூட விட மாட்டேன். ஏன் தெரியுமா?  அன்னிக்கு ஜாலியா நாள்முழுக்க ஸ்கூல்ல உக்காந்து சினிமா பாட்டெல்லாம் லவுட் ஸ்பீக்கர்ல  கேக்கலாம்.  இதுல,  ட்ரில் வாத்யார் சுப்பையாவுக்கு நான்  petங்கறதால, அவர்  in charge ல இருக்கற மைக்ஸெட் ஆளுகிட்ட எனக்கு வேணுங்கற பாட்ட கேக்கற  chance எனக்கு கிடைக்கும்  !  400 மீட்டர்ஸ் பசங்க ஓடும்போது இந்தப்பாட்ட போடுவாங்க. சரியாநாலு ரவுண்டு முடியறச்சே பாட்டும் முடியும்.  ரொம்ப பிடித்தது 1000 மீட்டர்ஸ் தான். நிறைய ரவுண...

நிலாக்கால நினைவுகள் - 5

Image
'வார்டனின்' அன்பு ! https://www.youtube.com/watch?v=_uAE2d0u3Ko 'சித்தமெல்லாம் எனக்கு சிவமயமே' -  என்ன ஒரு அற்புதமான பாடல்  !  'திருவருட்செல்வர்' படத்திலிருந்து! எனது பழைய நினைவுகளுக்குப் புதிய வண்ணம் தீட்டும்பல பாடல்களில் இதுவும் ஒன்று ! 1967 தீபாவளி ஸீஸன் !  அப்போது நான் ஏ.எம்.ஜெயின் கல்லூரியில் சேர்ந்த புதிது.  "வெளியுலகம் தெரிய வேண்டும், மனிதர்களுடன் பழக வேண்டும் , அறியாத பிள்ளையாயிருக்கிறான்" என்று பல காரணங்கள் சொல்லி என் விருப்பத்திற்கு மாறாக கல்லூரி விடுதியிலேயே என்னைத் தங்கவைத்து விட்டார்கள்.  எனது குழந்தைத்தனமான சுபாவம் 'ஹாஸ்டல் வார்டனுக்கு' மிகவும் பிடித்துப் போய் நான் அவரது செல்லப் பிள்ளையாகிவிட்டேன். எனக்கு மட்டும் வாராவாரம் சனிக்கிழமை வீட்டுக்குச் செல்ல அனுமதி கொடுப்பார். மற்றவருக்கெல்லாம் மாதம் ஒரு முறைதான்!  சக நண்பர்களுக்கு ஒரு பக்கம் பொறாமையும், ஒரு பக்கம் பரிகாசமாகவும் இருக்கும்! ஒவ்வொரு முறை திங்களன்று காலேஜ் போக சுணங்கியதும் சித்தப்பா ஆதரவுடன் தட்டிக் கொடுத்து லீவு எடுக்க அனுமதித்ததும், லீவு லெட்டர் கொடுத்ததும் ம...

நிலாக்கால நினைவுகள் - 4

Image
இளமை முதல் இசை ! https://www.youtube.com/watch?v=kMadL2V_SvY பூமியில் மானிட ஜென்மம் அடைந்துமோர்'  என்ற பாடல் இன்றைய வாட்சாப் பதிவாக சகோதரி லதா அனுப்பியிருந்தாள்.  'அசோக் குமார்' படத்திற்காக, பாபநாசம் சிவன் அவர்கள் எழுதி, எம்.கே.தியாகராஜ பாகவதர் அவர்கள் பாடி  நடித்த படம்/பாடல் !   நினைவுகளைப் பின்னோக்கி இழுத்துச் செல்லும் ஒரு அற்புதமான பாடல். கேட்கையிலேயே மனம் பால்ய நினைவுகளில் மூழ்கிவிட்டது.  அத்தை மகன் ஸ்ரீதருக்கு 4  அல்லது 5  வயது இருக்கும் அப்போது ! எனக்கு எட்டு வயது.  'பட்டப்பா' என்று நாங்கள் அன்போடு அழைக்கும், அவனது தந்தையார் (எனது அத்திம்பேர் - அத்தையின் கணவர்)  தினமும் எங்களனைவரையும் உறங்க வைக்கப் பாடும் பாடல்களில் ஒன்று 'பூமியில் மானிட ஜென்மம்' !  அருமையான குரல் அவருக்கு. இன்னும் அவரது குரல் என் காதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.. இது எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று.  அவர் தினமும் பாடும் பாடல்களின் பட்டியலைக்  கீழே தருகிறேன். சில பாடல்களை கேட்டிருப்பது கூட அபூர்வம்.  எனக்குள்  இசையார்...

Bhilai Memories

Image
நிலாக்கால நினைவுகள் - 3 Bhilai Memories https://youtu.be/vIQSnBbfeXY This afternoon I happened to hear an old Hindi film song 'bindiya chamkegi' from the film Do Raasthe. My very favorite film and song. Love it so much. This is the first Hindi Film I saw in my life, at Bhilai.  This refreshed my thoughts of stay at Bhilai for two months during vacation during 1971.  I saw this film four or five times during a span of just 15 days when it was screened at the only available theatre named 'Chitra Mandir',at Sector 10 where my Appa, Amma, Chithappa, Chithi and their daughter Meena were staying.  This film was really a hit ! All songs used to be so nice . From then on I became a fan of Rajesh Khanna.   Being a cosmopolitan area, where people of different regions stayed , Chitra Mandir used to screen excellent movies from all languages. That is the place where I saw my first Malayalam movie ''Lanka dhahanam" ,  starred by Prem Nazir and Vijayasree.. Lovely s...

நிலாக்கால நினைவுகள் - 2

Image
கட்டற்ற அன்பு, கலப்பற்ற பாசம் ! https://www.youtube.com/watch?v=xq0l5yT818U இன்று மாலை சகோதரி லதா எனக்கு அனுப்பியிருந்த ஒரு பழைய திரைப்பாடல் கொண்ட அருமையான  காணொளி ஒன்று , எனது நினைவுகளைப் பின்னோக்கி இழுத்துச் சென்றது. 'பட்டப்பா' என்று நாங்கள் செல்லமாக அழைக்கும்  ராஜம் மாமாவின் அன்பு என்னை அரவணைத்துச் சென்றுகொண்டிருந்த என் பள்ளிக் காலம் என் நினைவுகளில் அலை மோதியது.  'தாயடித்தால் தந்தையோடி  அணைப்பார், தந்தை அடித்தால் தாயோடி அணைப்பாள் ' என்ற அழகிய வரிகள் , என் வாழ்வின் வழியில் அழுத்தப் பதிந்துவிட்டன ! வேலை நிமித்தமாக வெளியுயூரில் வாழ்ந்திருந்தனர் எனது தந்தையும் தாயும். எனவே நான் வளர்ந்தது முற்றிலும் என் அத்தையிடமும் பிற்காலத்தில் என் சித்தப்பாவிடமும்தான். குறையொன்றும் எனக்கிருந்ததில்லை என்றும் !  குறிப்பாக மேற்சொன்ன பாடல் என் மனதில் துளிரவைத்த நிகழ்ச்சி குறித்துச் சொல்லவந்தேன் நான் ! முதலில் அதை முடித்து விடுகிறேன்! நான் ஏழாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்த காலம். அம்பத்தூர் ராமசுவாமி முதலியார் உயர்நிலைப் பள்ளியில் படிப்பு ! எனக்கு எப்போதுமே கணக்கு, வ...

ரவா உப்புமா தந்த ரம்மிய நினைவுகள் !

Image
நினைவுகளைக் கிளறிவிட்டது இன்றைய காலைச் சிற்றுண்டி ரவா உப்புமா! எனக்கு மிகவும் பிடித்த ஒன்றுதான் உப்புமா, அதுவும் மனைவி கையால் என்றால் மிகையில்லை ! ரவா உப்புமா என்றதுமே நினைவில் முந்திக்கொண்டு எழுவது 'தொச்சுத் தாத்தா' என்று பேரன் பேத்திகள் அனைவருமே அன்புடன் அழைக்கும் என் தாத்தா கே.எஸ்.கே. தான் ! சாப்பிடக்  கையில் எடுத்ததுமே நினைவுகள் உருளைகளாக உருண்டோடின எனது ஐந்தாம்  பிராயத்துக்கு! இடம்: 15 - A , வைத்தியர் அண்ணாமலை தெரு, மைலாப்பூர், சென்னை .  தாத்தா ஹாலில் அமர்ந்திருப்பார் ஒரு சுவரோரத்தில், ஒரு மணை சாய்மானத்திற்கும், ஒரு மணை உட்காரவும், அவற்றின் மேல் தகுதியான தலையணைகளோடும், அருகில் தன் வளைந்த தடியோடும், குடையோடும், ஒரு சில புத்தகங்களோடும் !  காலை ஆறு மணி வேளை! வெய்யில் கால வெளிச்சம் அப்போதே தொடங்கிவிடும்  !  'நமஸ்காரம்'  -  என்ற சொல் கேட்டுத் திரும்பினார் தாத்தா ! "ஆஹா! நெல்லையப்பரா ! வாருங்கோ!  நேத்திக்குத்தான் நெனச்சேன் ரொம்ப நாளா காணுமேன்னு ! உக்காருங்கோ!"  என்றவுடன் நெல்லையப்பர் அருகில் சப்பணமிட்டு தாத்தா போட்ட பலகை...