Posts

நிலாக் கால நினைவுகள் - 13

Image
'மாலையும்  இரவும்  சந்திக்கும்  இடத்தில்'  சகோதரி லதா இன்று என் நினைவுகளை மலர்விக்க நினைந்து அனுப்பிய ஒரு அற்புதமான பாடல் !  1961  இல் வெளிவந்த 'பாசம்' திரைப்படத்தின் பல இனிமையான பாடல்களில் இது என் மனம் கவர்ந்த ஒன்று. இந்தப் படத்தை நாங்கள் பார்த்தது 1961  இல் தான் ! மறக்கமுடியுமா அந்த இனிமையான நாளை ! எம்.ஜி.ஆர் படங்களின் பாடல்கள் என்றால் அவை அமுத கானமாகத்தான் இருக்கும். பாடல்களுக்காகவே படத்தைப் பார்க்க விரும்புவேன் ! 1964 க்கு மேல் பல படங்களை  மாமாவின் அலுவலகத்தில் தொழிலாளர் சங்க வளாகத்தில் பார்த்ததுண்டு. அப்படி, மாமா கூட்டிச் சென்ற ஒரு படம்தான் 'பாசம்' ! இசை மெல்லிசை மன்னர்கள் விசுவநாதன் - ராமமூர்த்தி.  பாடல் கவியரசர் கண்ணதாசன்!  மேற்குறிப்பிட்ட இந்தப் பாடலைப் பாடியவர்கள் திரு.பி.பி.ஸ்ரீனிவாஸ் மற்றும் ஜானகியம்மா ! இனிமையான குரல்கள் ! நல்ல பொருத்தம் !  இந்தப் பாடலுக்கு நடித்திருப்பவர்கள் கல்யாண்குமார் மற்றும் ஷீலா ! பொருத்தமான நடிப்பு ! விரசமில்லாத காதலை மிக அழகாக வெளிப்படுத்தும் நடிப்பு.! இன்னும் என் நினைவில் உள்ளது , ...

நிலாக் கால நினைவுகள் - 12

"கண்ணும் கண்ணும் கலந்து சொந்தம் கொண்டாடுதே"  இந்த நாட்டியப் போட்டியை எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காது ! நீங்கள் பார்த்ததுண்டா ?  இசையும், முகபாவங்களும், பொலபொலவென மத்தாப்பூக் கதிர்களாய் உதிரும் நாட்டியத்தின் விரைவசைவுகளும் என்றும் மனதில் நிற்கும்.  போட்டிக்கேற்ற கேள்வி பதில்களாய் பாடல் வரிகள் ! எப்படித்தான் எழுத முடிந்ததோ என்று வியக்க வைக்கும் ! கொத்தமங்கலம் சுப்பு அவர்களின் எளிமையான அதே சமயம் அழுத்தமான வரிகள் ! பி.லீலா மற்றும் ஜிக்கி இருவரின் இனிமையான மற்றும் வளமான குரல்கள் ! மனதை மயக்கும் அற்புதமான இசையை நமக்கு அளித்திருப்பவர் சி. ராமச்சந்திரா.  பத்மினி  மற்றும் வைஜயந்திமாலா இருவரின் மனம் கவரும் நாட்டியம் !  படத்தின் பெயர் 'வஞ்சிக்கோட்டை வாலிபன்' .  குறைந்த வசதிகளே கொண்ட கீற்றுக் கொட்டகையில் படத்தைப் பார்த்த அந்தக் காலகட்டங்கள்தான் எத்தனை மகிழ்ச்சியானவை ! இன்று நினைத்தாலும் சுவை குன்றாத சுந்தர நினைவுகள் !  மனதைப் பந்தாட வைக்கும் அந்த இனிமையான இசையும் , துள்ளல் நாட்டியமும் இன்றைக்கு நினைத்தாலும் மனத்தைக் கொள்ளை கொள்கின்றன ! ...

நிலாக் கால நினைவுகள் - 11

Image
"தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே,   அமைதியுன் நெஞ்சில் நிலவட்டுமே" ---------------------------------------------------------------------------------------------------------- இன்று என் நினைவை அள்ளிக் கொண்டுபோன ஒரு பாடல் !  'ஆலயமணி' என்ற அற்புதமான படத்தில் வரும் ஒரு அழகான, அமைதியான பாடல். என்றும் என் மனத்துக்குகந்த பாடல் !  பட்டப்பா (என் மாமா) வேலை பார்த்து வந்த டி.ஐ.சைக்கிள் நிறுவனத்தார், மாதமொரு முறை அவர்களது தொழிலாளர் சங்கத்தின் சார்பாக, அவர்களது அலுவலக வளாகத்தில், ஒரு படம் திரையிடுவது வழக்கம். அது ஒரு சனிக்கிழமை. அன்று காலை ஆபிஸ் கிளம்பும்போதே மாமா என்னையும் தம்பியையும் , மாலை அலுவலகத்தினருகில் வரும்படி சொல்லிவிட்டார், படம் பார்ப்பதற்காக ! அப்படிப் பார்த்த பல படங்களில் ஒன்றுதான் 'ஆலயமணி ' !  இன்னும் நினைவிலிருந்து அகலாத ஒரு படம். சினிமாவைத் தவிர போனஸாக, எங்களுக்கு ஆபிஸ் கேண்டினிலிருந்து பஜ்ஜி, காபி வேறு கிடைக்கும் . அதனால் நாங்கள் இங்கு படம் பார்ப்பதை மிகவும் விரும்புவோம்! ஆகா ! அந்த நினைவுகள்தான் எத்தனை இனிப்பானவை ! நிற்க, இந்தப் பட...

நிலாக் கால நினைவுகள் - 10

Image
பாத்தா பசுமரம் படுத்துவிட்டா நெடுமரம் இன்று என் தம்பி பாபு அனுப்பியிருந்த இன்னொரு சிறந்த பாடல் , 'திருவிளையாடல்' படத்திலிருந்து  'பாத்தா பசுமரம் படுத்துவிட்டா நெடுமரம்' என்ற பாடல்.  மனம் பின்னோக்கிப் பறந்து பறந்து வட்டமடிக்கிறது , கேட்கும்போது ! பட்டப்பாவே இரண்டு முறை கூட்டிச் சென்றிருக்கிறார் இந்தப் படத்திற்கு எங்களை !  ஐம்பத்து மூன்று வருடங்கள் ஆனாலும் கூட , அந்த இனிய காலங்கள் இன்னும் மனதை நிறைக்கின்றன !  அற்புதமான படம், பாடல்கள் !  கவியரசர் கண்ணதாசன் அவர்களின் வரிகளுக்குத் தகுந்தாற்போல் சிவாஜி கணேசன் அவர்களின் நடிப்பு !  திரையிசைத் திலகம் கே.வி.மகாதேவன் அவர்களின் அற்புதமான இசை!  டி.எம்.எஸ். அவர்களின் வெண்கலக்குரல்! இந்தப் பாடலின் வரிகளுக்குத் தகுந்தாற்போல் வேடமிட்டு நிற்கவைத்த பாத்திரங்களின் வரிசை ! வண்ணப் படங்கள் அருகியிருந்த அந்தக் காலத்தில், ஈஸ்ட்மென் கலர் வண்ணப்படம் ! ஏ.பி.நாகராஜன் அவர்களின் இயக்கம், திரைக்கதை, வசனம், தயாரிப்பு ! பொருத்தமான நடிகர்கள் ! ஒவ்வொரு நடிகரின் சோடை போகாத நடிப்பு ! அற்புதமான புராணக் கதை மற்றும் கதைய...

நிலாக் கால நினைவுகள் - 9

Image
மலரும் வான் நிலவும் சிந்தும் ஒலியெல்லாம்.. ஆஹா ! நினைவுகளைக் கிளறிவிடும் அற்புதமான ஒரு பாடல் ! என் தம்பி பாபு இன்று அனுப்பியிருந்த 'மலரும் வான் நிலவும்' என்ற பாடல் ! அம்பத்தூர் டென்ட் கொட்டாயில் பார்த்த எண்ணற்ற படங்களில் ஒன்று 'மகாகவி காளிதாஸ்' ! அற்புதமான படம் . படங்களைத் தேர்ந்தெடுத்துதான் எங்களைக் கூட்டிச் செல்வார் பட்டப்பா! அந்தப் பன்னிரண்டு/பதின்மூன்று வயதில் பார்க்கும் அனைத்துமே ஆச்சர்யமாக இருக்கும் ! அதுவும் சினிமா என்பது எஙகளுக்கு அளவிடற்கரிய ஒரு வரம் ! பார்த்துக் கொண்டிருக்கும்போதே கதையில் வரும் நகைச்சுவை, நடிப்பு, பாடல் அனைத்தையும் பற்றி எடுத்துச் சொல்லிக் கொண்டே இருப்பார். இதனால் தேவையற்ற சில காட்சிகளை குழந்தைகள் பார்க்க நேரிடாது ! நல்ல உத்தி ! புராணப் படங்களை பற்றிய கதைகளை முன்கூட்டியே எங்களுக்கு சொல்லியும் இருப்பார். அதனால் படத்தைப் பார்க்கும்போது ஏற்படும் மகிழ்ச்சி அளவற்றது. பதினாறு வயது வரை குழந்தைத்தனம் மாறாமலேயே இருந்துவிட்ட அந்தக் காலகட்டங்கள் மறக்கவே முடியாது ! இன்றைய குழந்தைகளோடு ஒப்பிட்டுப் பார்த்தால் பல விஷயங்களும் ஆச்சர்யமாகவே   இர...

நிலாக் கால நினைவுகள் - 8

Image
' மலர்களைப்போல் தங்கை உறங்குகிறாள் ' சகோதரி லதாவின்  இன்றைய தேர்வு  மேற்கண்ட பாடல் !  கேட்கும்போதே மனம் பறக்கிறது பின்னோக்கி ! நான் ஏழாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்த காலம். அம்பத்தூர் 'கிருஷ்ணா' கீற்றுக் கொட்டகையில் பார்த்த படம்.  அந்த மைதானமும், நடுவில் கொட்டகையும், மாட்டு  வண்டியில் படத்தின் விளம்பர ஓசையும், காட்சிகளாகக் கண்முன்னே விரிகின்றன !  மறக்க முடியாத வெற்றிப் படமான பாசமலர் படத்தின் ஒரு அருமையான பாடல்  . அந்தக் காலத்தில் ஒரு வெற்றி பெற்ற படமானால் அத்தனை பாடல்களும்  நன்றாகவே  இருக்கும்.  நடிப்பைச் சொல்வதா, கதையைச் சொல்வதா, இசையைச் சொல்வதா ,  இன்முக நடிகர் தேர்வைச்சொல்வதா, வசனத்தைச் சொல்வதா ,  பாடல் வரிகளைச் சொல்வதா, இயக்கத்தைச் சொல்வதா, இன்னொளிப் பதிவின் தரத்தைச் சொல்வதா .......ஒன்றுக்கொன்று போட்டி போட்டுக்கொண்டு செயல்பட்ட அக்காலத்திய திரைப் படங்கள் மகத்தான திரைக் காவியங்கள் என்பதில் சற்றும் ஐயமில்லை ! மேற்கூறிய இத்தனை விஷயங்களும் இந்த ஒரு பாடலிலேயே அடங்கிவிடும் என்று சொன்னால் மிகையாகாது. இசையும் வ...

நிலாக்கால நினைவுகள் - 7

Image
பார்த்த ஞாபகம் இல்லையோ ! இன்று சகோதரி லதா  Latha Rajaraman  எனக்கு அனுப்பியிருந்த பாடல் புதிய பறவை படத்திலிருந்து 'பார்த்த ஞாபகம் இல்லையோ' !  அருமையான  ஒன்று ! சேலம் கல்பனா திரையரங்கில் 70 களில் பார்த்த படம் ! இளமைக்கால நினைவுகள் தரும் சுகமே தனி. (கல்பனா திரையரங்கு இன்று இல்லை ! எல்லா பழைய கட்டிடங்களையும் போல புதிய 'மால்'கள் உருவாக இடம் கொடுத்து விட்டு அழிந்து மறைந்து விட்டது, என் நினைவுகளின் புகலிடமாக இருந்த அந்த இடம்!) அத்தையிடம் எதோ ஒரு பொய்யைச் சொல்லிவிட்டு கிளம்பிப் போய் பார்த்த பல படங்களில் ஒன்று. அத்தைக்குப் புரியாதா என்ன !! நிற்க, பாடலுக்கு வருவோம் ! மெல்லிசை மன்னர்களின் அதியற்புதமான பாடல்களில் ஒன்று 'பார்த்த ஞாபகம் இல்லையோ' . இந்தப் படத்தில் உள்ள அனைத்துப் பாடல்களுமே முத்தான பாடல்கள்தான் ! எனினும் இது எனது மனம் கவர்ந்த பாடல்களில் ஒன்று. ஆங்கிலேயர்களின் பாப் இசையை அழகாகக் கலந்து கொடுத்திருப்பர் மன்னர்கள். இசையரசி சுசீலா அம்மா அற்புதமாகப் பாடியிருப்பார். பின்னணி இசை கேட்கவே வேண்டாம்.! கவியரசரின் அற்புத வரிகளையும், நடிகர் திலகம் மற்றும் சவுகார...