எண்ணத்திலே ஓசைகள்.......
எண்ணத்திலே ஓசைகள்..... வருடம் 1968. ஒரு தொலைவான இடத்திற்கான, என் முதல் ரயில் பயணம் அம்மாவுடன்செய்தது என்றால், அது குடியாத்தத்திற்குதான் ! 17 வயதில் அம்மாவையும் கூட்டிக்கொண்டு நான் பயணம் புறப்பட்டது வீட்டில் அத்தை, சித்தப்பா, தாத்தா அனைவருக்கும் சற்று கலவரமாகவே இருந்தது. உலகம் தெரியாமல் குழந்தைகளை வளர்த்து விடுவது அந்தக் காலம். அப்படித்தான் ஒன்றுமறியாத சிறு பையனாக 18 வயது வரை வளர்ந்தேன் நான் ! மிகுந்த பயத்துடன் தான் என்னை அனுப்பி வைத்தார்கள் . அம்மாவை அங்கு, மாமா வீட்டில் விட்டுவிட்டு தனியாக திரும்ப சென்னை வரவேண்டுமே என்ற கவலை! நான் அங்கு கழித்த அந்த நான்கு நாட்களும் மறக்க முடியாதவை. என்னை நான் மிகவும் சுதந்திரமான மனிதனாக உணர்ந்தேன் . சென்னை வெயிலோடு வித்தியாசப்படுத்திப் பார்த்தோமானால், அது ஒரு குளிர் பிரதேசமாக தான் இருந்தது அப்போது ! கிராமம் என்றும் சொல்ல முடியாது, நகரம் என்றும் சொல்ல முடியாது. அப்படிப்பட்ட ஒரு இடம். காலை எழுந்து காபி குடித்தவுடன் வீட்டைச் சுற்றியிருந்த தெருக்களை எல்லாம் ஒரு வலம் வருவது வழக்கமாயிருந்தது. அத்தனை வீட்டு திண்ணையிலும் பெண்களும் குழந்த