Posts

Showing posts from June, 2018

நிலாக்கால நினைவுகள் - 5

Image
'வார்டனின்' அன்பு ! https://www.youtube.com/watch?v=_uAE2d0u3Ko 'சித்தமெல்லாம் எனக்கு சிவமயமே' -  என்ன ஒரு அற்புதமான பாடல்  !  'திருவருட்செல்வர்' படத்திலிருந்து! எனது பழைய நினைவுகளுக்குப் புதிய வண்ணம் தீட்டும்பல பாடல்களில் இதுவும் ஒன்று ! 1967 தீபாவளி ஸீஸன் !  அப்போது நான் ஏ.எம்.ஜெயின் கல்லூரியில் சேர்ந்த புதிது.  "வெளியுலகம் தெரிய வேண்டும், மனிதர்களுடன் பழக வேண்டும் , அறியாத பிள்ளையாயிருக்கிறான்" என்று பல காரணங்கள் சொல்லி என் விருப்பத்திற்கு மாறாக கல்லூரி விடுதியிலேயே என்னைத் தங்கவைத்து விட்டார்கள்.  எனது குழந்தைத்தனமான சுபாவம் 'ஹாஸ்டல் வார்டனுக்கு' மிகவும் பிடித்துப் போய் நான் அவரது செல்லப் பிள்ளையாகிவிட்டேன். எனக்கு மட்டும் வாராவாரம் சனிக்கிழமை வீட்டுக்குச் செல்ல அனுமதி கொடுப்பார். மற்றவருக்கெல்லாம் மாதம் ஒரு முறைதான்!  சக நண்பர்களுக்கு ஒரு பக்கம் பொறாமையும், ஒரு பக்கம் பரிகாசமாகவும் இருக்கும்! ஒவ்வொரு முறை திங்களன்று காலேஜ் போக சுணங்கியதும் சித்தப்பா ஆதரவுடன் தட்டிக் கொடுத்து லீவு எடுக்க அனுமதித்ததும், லீவு லெட்டர் கொடுத்ததும் ம...

நிலாக்கால நினைவுகள் - 4

Image
இளமை முதல் இசை ! https://www.youtube.com/watch?v=kMadL2V_SvY பூமியில் மானிட ஜென்மம் அடைந்துமோர்'  என்ற பாடல் இன்றைய வாட்சாப் பதிவாக சகோதரி லதா அனுப்பியிருந்தாள்.  'அசோக் குமார்' படத்திற்காக, பாபநாசம் சிவன் அவர்கள் எழுதி, எம்.கே.தியாகராஜ பாகவதர் அவர்கள் பாடி  நடித்த படம்/பாடல் !   நினைவுகளைப் பின்னோக்கி இழுத்துச் செல்லும் ஒரு அற்புதமான பாடல். கேட்கையிலேயே மனம் பால்ய நினைவுகளில் மூழ்கிவிட்டது.  அத்தை மகன் ஸ்ரீதருக்கு 4  அல்லது 5  வயது இருக்கும் அப்போது ! எனக்கு எட்டு வயது.  'பட்டப்பா' என்று நாங்கள் அன்போடு அழைக்கும், அவனது தந்தையார் (எனது அத்திம்பேர் - அத்தையின் கணவர்)  தினமும் எங்களனைவரையும் உறங்க வைக்கப் பாடும் பாடல்களில் ஒன்று 'பூமியில் மானிட ஜென்மம்' !  அருமையான குரல் அவருக்கு. இன்னும் அவரது குரல் என் காதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.. இது எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று.  அவர் தினமும் பாடும் பாடல்களின் பட்டியலைக்  கீழே தருகிறேன். சில பாடல்களை கேட்டிருப்பது கூட அபூர்வம்.  எனக்குள்  இசையார்...

Bhilai Memories

Image
நிலாக்கால நினைவுகள் - 3 Bhilai Memories https://youtu.be/vIQSnBbfeXY This afternoon I happened to hear an old Hindi film song 'bindiya chamkegi' from the film Do Raasthe. My very favorite film and song. Love it so much. This is the first Hindi Film I saw in my life, at Bhilai.  This refreshed my thoughts of stay at Bhilai for two months during vacation during 1971.  I saw this film four or five times during a span of just 15 days when it was screened at the only available theatre named 'Chitra Mandir',at Sector 10 where my Appa, Amma, Chithappa, Chithi and their daughter Meena were staying.  This film was really a hit ! All songs used to be so nice . From then on I became a fan of Rajesh Khanna.   Being a cosmopolitan area, where people of different regions stayed , Chitra Mandir used to screen excellent movies from all languages. That is the place where I saw my first Malayalam movie ''Lanka dhahanam" ,  starred by Prem Nazir and Vijayasree.. Lovely s...

நிலாக்கால நினைவுகள் - 2

Image
கட்டற்ற அன்பு, கலப்பற்ற பாசம் ! https://www.youtube.com/watch?v=xq0l5yT818U இன்று மாலை சகோதரி லதா எனக்கு அனுப்பியிருந்த ஒரு பழைய திரைப்பாடல் கொண்ட அருமையான  காணொளி ஒன்று , எனது நினைவுகளைப் பின்னோக்கி இழுத்துச் சென்றது. 'பட்டப்பா' என்று நாங்கள் செல்லமாக அழைக்கும்  ராஜம் மாமாவின் அன்பு என்னை அரவணைத்துச் சென்றுகொண்டிருந்த என் பள்ளிக் காலம் என் நினைவுகளில் அலை மோதியது.  'தாயடித்தால் தந்தையோடி  அணைப்பார், தந்தை அடித்தால் தாயோடி அணைப்பாள் ' என்ற அழகிய வரிகள் , என் வாழ்வின் வழியில் அழுத்தப் பதிந்துவிட்டன ! வேலை நிமித்தமாக வெளியுயூரில் வாழ்ந்திருந்தனர் எனது தந்தையும் தாயும். எனவே நான் வளர்ந்தது முற்றிலும் என் அத்தையிடமும் பிற்காலத்தில் என் சித்தப்பாவிடமும்தான். குறையொன்றும் எனக்கிருந்ததில்லை என்றும் !  குறிப்பாக மேற்சொன்ன பாடல் என் மனதில் துளிரவைத்த நிகழ்ச்சி குறித்துச் சொல்லவந்தேன் நான் ! முதலில் அதை முடித்து விடுகிறேன்! நான் ஏழாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்த காலம். அம்பத்தூர் ராமசுவாமி முதலியார் உயர்நிலைப் பள்ளியில் படிப்பு ! எனக்கு எப்போதுமே கணக்கு, வ...

ரவா உப்புமா தந்த ரம்மிய நினைவுகள் !

Image
நினைவுகளைக் கிளறிவிட்டது இன்றைய காலைச் சிற்றுண்டி ரவா உப்புமா! எனக்கு மிகவும் பிடித்த ஒன்றுதான் உப்புமா, அதுவும் மனைவி கையால் என்றால் மிகையில்லை ! ரவா உப்புமா என்றதுமே நினைவில் முந்திக்கொண்டு எழுவது 'தொச்சுத் தாத்தா' என்று பேரன் பேத்திகள் அனைவருமே அன்புடன் அழைக்கும் என் தாத்தா கே.எஸ்.கே. தான் ! சாப்பிடக்  கையில் எடுத்ததுமே நினைவுகள் உருளைகளாக உருண்டோடின எனது ஐந்தாம்  பிராயத்துக்கு! இடம்: 15 - A , வைத்தியர் அண்ணாமலை தெரு, மைலாப்பூர், சென்னை .  தாத்தா ஹாலில் அமர்ந்திருப்பார் ஒரு சுவரோரத்தில், ஒரு மணை சாய்மானத்திற்கும், ஒரு மணை உட்காரவும், அவற்றின் மேல் தகுதியான தலையணைகளோடும், அருகில் தன் வளைந்த தடியோடும், குடையோடும், ஒரு சில புத்தகங்களோடும் !  காலை ஆறு மணி வேளை! வெய்யில் கால வெளிச்சம் அப்போதே தொடங்கிவிடும்  !  'நமஸ்காரம்'  -  என்ற சொல் கேட்டுத் திரும்பினார் தாத்தா ! "ஆஹா! நெல்லையப்பரா ! வாருங்கோ!  நேத்திக்குத்தான் நெனச்சேன் ரொம்ப நாளா காணுமேன்னு ! உக்காருங்கோ!"  என்றவுடன் நெல்லையப்பர் அருகில் சப்பணமிட்டு தாத்தா போட்ட பலகை...