Posts

Showing posts from 2020

நிலாக்கால நினைவுகள்- 17

நிலாக்கால நினைவுகள் - 17 "கருத்த நின் கூந்தலுக்கு கவி வேண்டுமா உன்  காலிட்ட சதங்கைக்கு ஜதி வேண்டுமா" - மயக்க வைக்கும் வரிகள் ! ஏதோ பார்த்துப் பார்த்துச் சலித்த ஒரு ஸீரியலையே திரும்பத்திரும்பப் பார்த்துக்கொண்டிருந்த எனக்கு, அது முடிந்த அடுத்த கணம் காணக்கிடைத்த அருமையான பாடல் காட்சி இது! இவை எல்லாம் எத்தனை முறை பார்த்தாலும் அலுக்கும? சலிக்குமா?  கவியரசரின் வைர வரிகள்!  முத்துச் சலங்கை முன்வந்து கொஞ்சும் கிளி எனப் பொழியும் திரையிசைத் திலகம் கே.வி.எம்.மின் இசை , அட்டகாசமான அடாணா ராகத்தில் !  அந்த ராகத்தின் கம்பீரத்தைப் பதம் பார்க்கும் திறனுள்ள ஏழிசை வேந்தன் டி.எம்.எஸ்.ஸின் கணீரென்ற குரல் !  அனைத்துக்கும் இணை சேர்க்கும் சிம்மக்குரலோன் சிவாஜியின் அபார நடிப்பு ! இவை அனைத்தும் ஒன்று சேர்ந்து இன்றைய மாலைப் பொழுதை மேலும் அழகாக்கின.  மனம் எங்கோ கடந்த காலத்துக்கு பறந்து பறந்து சென்றது, ஏறக்குறைய 455 வருடங்கள் பின்னோக்கி! பள்ளிக்காலத்தில் கொட்டகையில் பார்த்த பல படங்களில் ஒன்று மகாகவி காளிதாஸ் நான் காண ஆசைப்பட்ட எல்லா படங்களுக்கும் கூட்டி செல்வார் , தன் மக...

'ரீ யூனியன்' நினைவுகள்

Image
ரீ யூனியன் நினைவுகள் மொபைல் போன் அடித்து ஓய்ந்தது. அவன், அருகிலேயே அமர்ந்து கொண்டிருந்தான், ஏதோ யோசனையில் மூழ்கியவாறு ! ! சிந்தனை எங்கோ பறந்து கொண்டிருந்தது. திரும்பவும் போன் அடித்தது. மனைவி ஓடிவந்து “போன் அடிக்கிறது பாருங்கள் . ஹியரிங் எய்ட் ஒண்ணு வாங்கிக் கொடுத்திருக்கான் மாப்பிள்ளை அதை மாட்டிக்கறதே இல்லை” என்று அங்கலாய்த்தாள். போனை எடுத்து நீட்டினாள்.  உடனேயே இயர் போனை எடுத்து மாட்டிக் கொண்டவன் பேசத்தொடங்கினான். “ஹலோ யார் பேசறது?” “ஹலோ, யாரு பாலாஜியா? என் குரல்புரியறதா?” “ரொம்பப் பரிச்சயமான குரல்தான்! ஒரு நிமிஷம்……அடேய்! கிருஷ்ணமூர்த்தியா?” “ எப்படி கண்டுபிடிச்ச? நாம் பார்த்தோ பேசியோ குறஞ்சது நாற்பது வருஷமாவது ஆகியிருக்குமே!” "ஆமாம்! அந்தக் காலத்து ஆர்மோனியப் பொட்டி மாதிரி எட்டுக் கட்டை குரல் வேறு யாருக்கு வரும்?  பழகிப்போன குரல்!  உடனே கண்டுபிடிச்சிட்டேன் . அது சரி!  நீ எப்படி இருக்க? எத்தனை வருஷம் ஆச்சு? எங்க இருக்க? என்ன செய்ற? என் நம்பர் உனக்கு எப்படி கிடைச்சது?" "எல்லாம் விவரமா சொல்றேன்டா ! அவசரப்படாதே!  மெட்ராஸ்ல நீ வேல ...

"அய்யருக்கு இவ்வளோ பெரிய பையனா?"

Image
வருடம் 1973. என் சித்தப்பா கே நடராஜன் அவர்கள் (அய்யர் என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்டவர்) கண்ணதாசன் புரொடக்ஷன்ஸ் கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டிருந்த காலம் .  கவிஞரைப் பற்றி அவர் என்னிடம் பேசாத நாளில்லை. அந்தக் காலகட்டத்தில் நான் வளர்ந்தது சித்தப்பாவிடம் தான் ! அந்த 14 முதல் 22 வயதுக்கு உட்பட்ட பருவத்தில் என்னை உருவாக்கி எடுத்தவர் அவர்தான் . எப்படி மனிதர்களிடம் பேசவேண்டும், பழகவேண்டும், நடத்தைகள் எப்படி இருத்தல் வேண்டும் என்று அனைத்தையும் சொல்லித் தந்து மெருகேற்றியவர் அவரே.  கவிஞரிடம் அவர் பணியாற்றிக் கொண்டிருந்த காலகட்டம்.  ஒரு சமயம் சித்தப்பாவுக்கு நல்ல காய்ச்சல்.  இரண்டு நாட்களாக வேலைக்கு செல்ல இயலவில்லை . மாதத்தின் முதல் வாரம் . பணத்தேவை . வேலைக்குச் செல்லாததால் சம்பளம் வாங்க முடியவில்லை . அப்போதுதான் கவிஞரின் அலுவலகத்திற்கு போன் செய்து சொன்ன பிறகு என்னை அங்கு அனுப்பிப் பணத்தை வாங்கி வரச்சொன்னார். எனக்கு வயது 20 ஆகியிருந்தாலும் நான் ஒரு மௌனி .அதிகம் பேச பயப்படுவேன். 'இந்த பயமும் கூச்சமும் உனக்கு இருக்கக்கூடாது . நாலு பேரிடம் பேசிப் பழகினால் தான் சரிய...