Posts

Showing posts from July, 2018

நிலாக் கால நினைவுகள் - 8

Image
' மலர்களைப்போல் தங்கை உறங்குகிறாள் ' சகோதரி லதாவின்  இன்றைய தேர்வு  மேற்கண்ட பாடல் !  கேட்கும்போதே மனம் பறக்கிறது பின்னோக்கி ! நான் ஏழாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்த காலம். அம்பத்தூர் 'கிருஷ்ணா' கீற்றுக் கொட்டகையில் பார்த்த படம்.  அந்த மைதானமும், நடுவில் கொட்டகையும், மாட்டு  வண்டியில் படத்தின் விளம்பர ஓசையும், காட்சிகளாகக் கண்முன்னே விரிகின்றன !  மறக்க முடியாத வெற்றிப் படமான பாசமலர் படத்தின் ஒரு அருமையான பாடல்  . அந்தக் காலத்தில் ஒரு வெற்றி பெற்ற படமானால் அத்தனை பாடல்களும்  நன்றாகவே  இருக்கும்.  நடிப்பைச் சொல்வதா, கதையைச் சொல்வதா, இசையைச் சொல்வதா ,  இன்முக நடிகர் தேர்வைச்சொல்வதா, வசனத்தைச் சொல்வதா ,  பாடல் வரிகளைச் சொல்வதா, இயக்கத்தைச் சொல்வதா, இன்னொளிப் பதிவின் தரத்தைச் சொல்வதா .......ஒன்றுக்கொன்று போட்டி போட்டுக்கொண்டு செயல்பட்ட அக்காலத்திய திரைப் படங்கள் மகத்தான திரைக் காவியங்கள் என்பதில் சற்றும் ஐயமில்லை ! மேற்கூறிய இத்தனை விஷயங்களும் இந்த ஒரு பாடலிலேயே அடங்கிவிடும் என்று சொன்னால் மிகையாகாது. இசையும் வ...

நிலாக்கால நினைவுகள் - 7

Image
பார்த்த ஞாபகம் இல்லையோ ! இன்று சகோதரி லதா  Latha Rajaraman  எனக்கு அனுப்பியிருந்த பாடல் புதிய பறவை படத்திலிருந்து 'பார்த்த ஞாபகம் இல்லையோ' !  அருமையான  ஒன்று ! சேலம் கல்பனா திரையரங்கில் 70 களில் பார்த்த படம் ! இளமைக்கால நினைவுகள் தரும் சுகமே தனி. (கல்பனா திரையரங்கு இன்று இல்லை ! எல்லா பழைய கட்டிடங்களையும் போல புதிய 'மால்'கள் உருவாக இடம் கொடுத்து விட்டு அழிந்து மறைந்து விட்டது, என் நினைவுகளின் புகலிடமாக இருந்த அந்த இடம்!) அத்தையிடம் எதோ ஒரு பொய்யைச் சொல்லிவிட்டு கிளம்பிப் போய் பார்த்த பல படங்களில் ஒன்று. அத்தைக்குப் புரியாதா என்ன !! நிற்க, பாடலுக்கு வருவோம் ! மெல்லிசை மன்னர்களின் அதியற்புதமான பாடல்களில் ஒன்று 'பார்த்த ஞாபகம் இல்லையோ' . இந்தப் படத்தில் உள்ள அனைத்துப் பாடல்களுமே முத்தான பாடல்கள்தான் ! எனினும் இது எனது மனம் கவர்ந்த பாடல்களில் ஒன்று. ஆங்கிலேயர்களின் பாப் இசையை அழகாகக் கலந்து கொடுத்திருப்பர் மன்னர்கள். இசையரசி சுசீலா அம்மா அற்புதமாகப் பாடியிருப்பார். பின்னணி இசை கேட்கவே வேண்டாம்.! கவியரசரின் அற்புத வரிகளையும், நடிகர் திலகம் மற்றும் சவுகார...

நிலாக்கால நினைவுகள் - 6

Image
'காவேரிக் கரையிருக்கு கரை மேலே பூவிருக்கு' 'காவேரிக் கரையிருக்கு கரை மேலே பூவிருக்கு' இன்று லதா என்ன ஒரு அருமையான பாடலை அனுப்பியிருந்தார் தெரியுமா  !  "காவேரிக் கரையிருக்கு, கரை மேலே பூவிருக்கு" என்ற பாடல்! நினைவுச்சக்கரம் மறுபடி பின்னோக்கிச் சுழல்கிறது.  This particular song takes me back to my school days. I was in my 8th std.  There used to be Sports Day every year , as everyone knows. Sports க்கும் எனக்கும் ஏணி வச்சாக்குட எட்பாது.  ஆனா நான் ஒரு ஸ்போர்ட்ஸ் டே கூட விட மாட்டேன். ஏன் தெரியுமா?  அன்னிக்கு ஜாலியா நாள்முழுக்க ஸ்கூல்ல உக்காந்து சினிமா பாட்டெல்லாம் லவுட் ஸ்பீக்கர்ல  கேக்கலாம்.  இதுல,  ட்ரில் வாத்யார் சுப்பையாவுக்கு நான்  petங்கறதால, அவர்  in charge ல இருக்கற மைக்ஸெட் ஆளுகிட்ட எனக்கு வேணுங்கற பாட்ட கேக்கற  chance எனக்கு கிடைக்கும்  !  400 மீட்டர்ஸ் பசங்க ஓடும்போது இந்தப்பாட்ட போடுவாங்க. சரியாநாலு ரவுண்டு முடியறச்சே பாட்டும் முடியும்.  ரொம்ப பிடித்தது 1000 மீட்டர்ஸ் தான். நிறைய ரவுண...